இரவீஸ்வரர்- என்னே அம்மையப்பனுக்கு வந்த சோதனை?
உறவினர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருக்கும் போது யதேச்சையாக வியாசர்பாடி கோவிலின் அறிமுகம் கிடைத்தது. ஒரு இடத்திற்கு வழி சொல்லும் போது landmark-ஆக சொல்லப் பட்டது இந்தக் கோவில்.
மிகவும் பழமையான சிவன் கோவில் எனவும், சூரியன் வழிபட்ட சிவன் என்றும், வியாசர் பாடிய இடம் என்பதாலேயே அந்த இடமே வியாசர்பாடி என்று பெயர் பெற்றது என்றும் கூறினார். வியாசர்பாடி என்றதும் பெயர்க் காரணம் அதுவரை எனக்குத் தெரியாது.ஆர்வம் அதிகமாக வலையில் தேடிய கோவில் பற்றி மேலும் விவரங்கள் பெற்றுக் கொண்டு நேற்று போய் வந்ததில் இருந்து ஒரே கவலையாப் போச்சு போங்க.
ஊரையெல்லாம் காக்கும் தாண்டவர்க்கோனே கொஞ்சம் உண்டியலையும் காக்கவேணும் தாண்டவர்க் கோனே
சில மாதங்கள் முன்பு சென்னை கபாலீஸ்வரர் கோவில் உண்டியல் திருட்டு போனதும், திருடன் எப்படி திருடினான் போலீஸ் எப்படி அவனை எப்படி [...]
பென்சில் கோடுகள் கோவில் சிற்பங்களோடு ஒப்பிடத்தக்கதா?
ஒரு சில பென்சில் கோடுகளை கோவில் சிற்பங்களோடு ஒப்பீடு செய்து அங்கீகாரம் கேட்பது நியாயமாக இருக்கிறதா என்று [...]
